Tuesday, December 25, 2012

My Tamil short story in Solvanam


One of my short stories, ரசிகன், has been published in the Tamil Online magazine - சொல்வனம் (Solvanam.com).
Link: http://solvanam.com/?p=23073
Few lines:

வர்ணம் பாடி முடித்ததில் இருந்து நானும் கவனித்துக் கொண்டிருந்தேன். உட்கார்ந்திருந்த பத்துப் பேர் ஒருவர் ஒருவராகக் கரைந்து கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொருவரும் எழுந்து போகும் போது முறைத்துப் பார்த்தேன். ஓங்கி ஓங்கித் தாளம் போட்டேன். பாடிக் கொண்டே உச்ச ஸ்தாயியில் முகம் சுளிக்கக் கூட முயற்சி செய்தேன்.
போனவர்கள் இன்னும் வேகமாக அகன்றார்கள்.
அலுவலக நண்பர்கள் இருவர் எழுந்து ‘தம்’ அடிக்கப் போவதாகக் கை காட்டிச் சென்றார்கள். திரும்ப வரவேயில்லை. தனி ஆவர்த்தனம் நெருங்கியது. மிஞ்சி இருக்கும் நாலு புண்ணியவான்கள் அகன்று விடுவார்களோ என்ற பயத்தில் மிருதங்கத்தானைக் கண்களால் கெஞ்சினேன். அவனோ இரக்கமேயில்லாமல் ஆவர்த்தனம் தொடங்கினான். பளார், பளாரென்று காது கிழிய அவன் அடித்த அடியில் மூன்று பேர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள்.
எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. உட்கார்ந்திருந்த ஒருவருக்காக இன்னும் முக்கால் மணி நேரம் பாட வேண்டுமா? இல்லை நிறுத்தி விட்டு வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கவா?

No comments: